/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பன்னிரு திருமுறை மாநாடு துவக்கம்
/
காஞ்சியில் பன்னிரு திருமுறை மாநாடு துவக்கம்
ADDED : ஜூலை 26, 2025 09:07 PM
காஞ்சிபுரம்:பன்னிரு திருமுறை, தமிழ் வேதங்கள் மாநாடு துவக்க விழா, காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மனோன்மணி சண்முகம் திருமண மண்டபத்தில் துவங்கிய மாநாட்டிற்கு அருள்நிறை அண்ணாமலை தலைமை வகித்தார். முதல் நாளான நேற்று, அடியார்கள் அறிமுக நிகழ்ச்சியும், தொடர்ந்து சிவபூஜை என்ற தலைப்பில், பக்தவச்சலம் சொற்பொழி வாற்றினார்.
இன்று, அதிகாலை 4:00 மணிக்குசென்னை சேலையூர் ராமமூர்த்தி குழுவினரின் திருமுறை இசையும், காலை 5:15 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்பட்டு சிவபூஜை நடக்கிறது.
காலை 8:15 மணிக்கு விடைகொடி ஏற்றுதலும், தொடர்ந்து திருமுறை வீதிவலம், திருமுறை சொற்பொழிவு, நுால் வெளியீட்டு விழா, திருமுறை சொற்பொழிவு, மாலை 6:15 மணிக்கு நமசிவாய' என்ற ஐந்தெழுத்து பெருவேள்வி உள்ளிட்டவை நடக்கிறது.