/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரண்டரை வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு
/
இரண்டரை வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு
ADDED : நவ 22, 2024 08:00 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத், ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர்கள் சுரேந்தர், 34, - கார்த்திகா, 28, தம்பதி. இவர்களுக்கு, இரண்டரை வயதில் அதர்வ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அதர்வ் மூச்சுத்திணறல் பிரச்னையால், ஒரு வாரமாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 20ம் தேதி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு குழந்தை அதர்வ்க்கு, மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், உடல்நிலை மிகவும் மோசமானது. உடனடியாக பெற்றோர், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எனினும், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு குழந்தையோடு விரைந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்ததை உறுதிபடுத்தினர்.