/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது
/
கல்லுாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது
ADDED : ஜன 14, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரிக்கு பின்புறமாக, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, அங்கு சென்ற போலீசார், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, வளர்புரம் கிராமத்தை சேர்ந்த விஜய், 30, மண்ணுார் கிராமத்தை சேர்ந்த சஞசய், 18, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 35,000 ரூபாய் மதிப்புள்ள, 1.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.