sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண்ணிடம் சில்மிஷம் இருவர் கைது

/

பெண்ணிடம் சில்மிஷம் இருவர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் இருவர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் இருவர் கைது


ADDED : அக் 26, 2025 10:50 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை: படப்பையில், தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை அடுத்த சாலமங்கலத்தை சேர்ந்த, 28 வயது பெண், மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 24ம் தேதி இரவு, பணியை முடித்துவிட்டு, சாலமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தனது வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்து, ஆபாசமாக பேசி தப்பி சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து, படப்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சில்மிஷம் செய்தது, ஒரகடத்தில் தங்கி, கார் ஓட்டுநராக பணியாற்றும் திருப்பத்துார் பகுதியை சேர்ந்த சக்திவேல், 21, வந்தவாசியை சேர்ந்த ரகு, 32, என்பது தெரிய வந்தது.

இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us