sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து வீணாகும் உபகரணங்கள்

/

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து வீணாகும் உபகரணங்கள்

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து வீணாகும் உபகரணங்கள்

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து வீணாகும் உபகரணங்கள்


ADDED : அக் 30, 2024 02:43 AM

Google News

ADDED : அக் 30, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் குடியிருப்பு பகுதியில், 2016ல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

போதிய பராமரிப்புகள் இல்லாததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்பாடு இன்றி உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்கள் விளையாட்டு பூங்காவின் பல இடங்களில், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய பாதையில் செடி, கொடிகள் புதர்மண்டி உள்ளன.

இதனால், நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் இடமின்றி அவதி அடைகின்றனர்.

அப்பகுதியினர் கூறுகையில், 'பூங்காவை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஆட்கள் கிடையாது. இரவு நேரங்களில், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பூங்காவை பராமரித்து பாதுகாத்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.






      Dinamalar
      Follow us