sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரும்புலியூர் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

/

அரும்புலியூர் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

அரும்புலியூர் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

அரும்புலியூர் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்


ADDED : அக் 01, 2024 01:58 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான 450 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழை காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி தண்டரை, சித்தனக்காவூர் ஆகிய ஏரிகளுக்கு சென்று, மாம்பாக்கம் வழியாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு சென்றடையும்.

அரும்புலியூர் ஏரியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் இக்கால்வாய், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி தூர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல வழி வகை இல்லாமல், கால்வாயில் ஆங்காங்கே தேங்கி விவசாய நிலங்களில் வழிந்தோடும் நிலை உள்ளது.

எனவே, அரும்புலியூர் ஏரியில் இருந்து, உபரி நீர் வெளியேறி செல்லும் கால்வாயை தூர்வாரி சீர் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us