/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர் மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர் மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர் மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2024 12:30 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில், செல்லியம்மன் கோவில் குளத்தில் இருந்து விவேகானந்தர் நகர், அரசமர தெரு வழியாக மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், மழைநீர் செல்லும் கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் திருப்பருத்திகுன்றம் அரசமர தெருவில் உள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.