sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

/

 பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

 பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

 பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்


ADDED : நவ 20, 2025 04:20 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்: பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை இல்லாததால், மழை மற்றும் வெயிலில் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நிழற்கூரை அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில்வே தடத்தில் பழையசீவரம் ரயில் நிலையம் உள்ளது. பழையசீவரம் மற்றும் அதை சுற்றி உள்ள பல கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து ரயிலில் பயணித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை இல்லாததால், ரயிலில் பயணிக்க வரும் பயணியர் நடைமேடையில் காத்திருக்கும்போது, மழை நேரங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, பழையசீவரம் ரயில் நிலைய நடை மேடையில் நிழற்கூரை மற்றும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us