/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரும்புலியூர் ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
/
அரும்புலியூர் ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
அரும்புலியூர் ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
அரும்புலியூர் ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2025 01:41 AM

அரும்புலியூர்:அரும்புலியூர் ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரி நீர் பாசனத்தை கொண்டு அரும்புலியூர், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
அரும்புலியூர் ஏரிக்கரை முழுக்க சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதராக இருந்தன.
இதனால், விவசாயம் சார்ந்த பணிகளின் பயன்பாட்டிற்காக மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை ஏரிக்கரை மீது இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதனால், ஏரிக்கரை மீது உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த ஆண்டில், 1.90 கோடி ரூபாய் செலவில் அரும்புலியூர் ஏரிக்கரை பலப்படுத்துதல் மற்றும் மதகு, கலங்கல் பகுதி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, ஏரிக்கரை மீதுள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றம் செய்யப்பட்டன. எனினும், மீண்டும் முள் மரங்கள் வளர்வதோடு, மழைக்காலங்களில் ஏரிக்கரையில் சகதியான நிலை தொடர்கிறது.
எனவே, அரும்புலியூர் ஏரிக்கரையில் துவங்கி, காவணிப்பாக்கம் வரையிலான ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க அரும்புலியூர் மற்றும் காவணிப்பாக்கம் கிராம விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.