/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 11, 2025 01:36 AM

வளத்தோட்டம்:காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், காலனிக்கு செல்லும் சாலையோரம், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், இக்கால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்து கால்வாயில் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் சூழும் நிலை உள்ளது.
எனவே, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

