/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 16, 2024 12:45 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு தாட்டித்தோப்பு, முருகன் நெசவாளர் குடியிருப்பு பிரதான சாலையோரம் மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் புதர்போல மண்டி, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், முருகன் நெசவாளர் குடியிருப்பு பிரதான சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.