/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாசி படர்ந்துள்ள காசி குட்டையை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
பாசி படர்ந்துள்ள காசி குட்டையை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
பாசி படர்ந்துள்ள காசி குட்டையை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
பாசி படர்ந்துள்ள காசி குட்டையை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 29, 2025 12:35 AM

காஞ்சிபுரம்:பாசி படர்ந்து, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ள சின்ன காஞ்சிபுரம் காசி குட்டையை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் சாலையோரம் உள்ள காசி குட்டை அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது.
இக்குட்டை, 2019ல், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த அத்திவரதர் வைபவத்திற்கு முன் துார்வாரி சீரமைக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் இக்குட்டையை முறையாக பராமரிக்காததால், குட்டையில் தேங்கியுள்ள நீரில், பாசி படர்ந்து உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் இறைச்சி, மீன் கழிவுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட குப்பையை கொட்டும் இடமாக குட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, குட்டையில் தேங்கியுள்ள நீர் மாசடைவதால், அப் பகுதி நிலத்தடி நீரும் மாசடையும் நிலை உள்ளது.
எனவே, காசி குட்டை யை துார்வாரி சீரமைப்பதோடு, குட்டையை சுற்றிலும் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில், நடைபாதை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.