/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுணை பெருகல் கிராம குளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
/
சிறுணை பெருகல் கிராம குளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
சிறுணை பெருகல் கிராம குளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
சிறுணை பெருகல் கிராம குளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 01:06 AM

பாலுச்செட்டிசத்திரம்:சிறுணை பெருகல் குளத்திற்கு, தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுணை ஊராட்சியில், கீழ் சிறுணை, மேல் சிறுணை, சிறுணை பெருகல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், சிறுணை பெருகல் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிப்புகளின் நடுவே, இரண்டு ஏக்கர் பரப்பளவில், மிகப் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும், ஊராட்சி நிர்வாகம் கற்கள் பதித்து, படிகெட்டுகள் கட்டியுள்ளனர். இருப்பினும், குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கவில்லை.
இதனால், குடியிருப்புகளில் இருக்கும் குழந்தைகள் விளையாடும் போது, தவறி குளத்தில் கவிழும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, பொது குளத்திற்கு வேலி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.