/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2025 02:14 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஆரநேரி பிரதான சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி கிராமத்தில், 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
தவிர, ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள், வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.
ஆரநேரி பிரதான சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வல்லம் வடகால் சிப்காட் தொழில்பூங்காவில் இருந்து, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலை, சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் பல்லாங்குழியான சாலையில் சென்று வருவதால், அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், மழை காலங்களில் சாலை சகதியாக மாறி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.