sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் சுந்தர வரதர் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா

/

உத்திரமேரூர் சுந்தர வரதர் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா

உத்திரமேரூர் சுந்தர வரதர் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா

உத்திரமேரூர் சுந்தர வரதர் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா


ADDED : மே 06, 2025 12:31 AM

Google News

ADDED : மே 06, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,உத்திரமேரூரில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்சவ விழா, நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, பிரம்மோத்சவம் நடக்கும் பத்து நாட்களிலும், பெருமாளுக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. பின், ஒவ்வொரு நாளும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் விதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன்படி, பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான, நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு பெருமாள் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார்.

அதை தொடர்ந்து, நேற்று, காலை 8:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்தார். இதில், திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

இந்த பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று, காலை 4:00 மணிக்கு கருட சேவையும், வரும் 10ம் தேதி, காலை 6:00 மணிக்கு திருத்தேர் உத்சவமும் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us