/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருமாள் கோவில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி
/
பெருமாள் கோவில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி
ADDED : ஜன 08, 2025 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை நடுத்தெருவில், வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது.
ஜன.,10ம் தேதி அதிகாலை, 4:30 மணி அளவில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடேசப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா செல்ல உள்ளார்.
அதேபோல், தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு, காலை சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள உள்ளார்.

