/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வள்ளலார் அவதார விழா ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
/
வள்ளலார் அவதார விழா ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
ADDED : அக் 06, 2025 01:11 AM

காஞ்சிபுரம்,:திருவருட்பிரகாச வள்ளலாரின் அவதார திருநாள் விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.
காஞ்சிபுரம் அண்ணாதுரை தெருவில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைக்கப்படும் சத்திய ஞான சபை உள்ளது. இங்கு, திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் விழா நேற்று விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 5:30க்கு திருப்பள்ளியெழுச்சியும், தொடர்ந்து, சன்மார்க்கக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆராதனையும், காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 4:30 மணிக்கு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனையும், தொடர்ந்து வள்ளலாரின் மார்கநெறிகள் குறித்து ராமலிங்க அடிகள் அருள் நிலைய ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றினார்.
இரவு 7:15 மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதமும், ஆடையும் வழங்கப்பட்டது.