/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காணும் பொங்கலுக்கு வண்டலுார் பூங்கா 'ரெடி'
/
காணும் பொங்கலுக்கு வண்டலுார் பூங்கா 'ரெடி'
ADDED : ஜன 16, 2025 01:08 AM

தாம்பரம்,
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையின்போது, ஏராளமான பார்வையாளர்கள் வருவர். கடந்தாண்டு காணும் பொங்கல் அன்று, 23,000 பேர் மட்டுமே வந்தனர். வண்டலுார் பூங்காவில், டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதே பார்வையாளர்கள் குறைந்து வருவதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்தாண்டு காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.
ஆன்லைன் மற்றும் வாட்ஸாப் வாயிலாக நுழைவு கட்டண டிக்கெட் பெறலாம். நேரடியாக டிக்கெட் பெறும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன
பூங்காவில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், கார், பைக், வேன் மற்றும் கனரக வாகனங்களுக்கு நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல, இலவச வாகன வசதி உள்ளது
பாதுகாப்பு பணிக்காக 150 போலீசார், சென்னை, வேலுார், தர்மபுரி மற்றும் விழுப்புரம் வட்டங்களை சேர்ந்த 115 வனத்துறையினர், 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 25 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன
பூங்காவிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் லயன் சபாரி வாகனங்கள் இயங்காது. நெரிசலை சமாளிக்க, மீனகம் மற்றும் பட்டாம்பூச்சி குடில் போன்ற மூடிய அடைப்புகள் மூடப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள், விலங்குகளுக்கு உணவு அளிக்கவோ, கிண்டல் செய்யவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

