sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம் வரும் 30ல் களக்காட்டூரில் வீதியுலா

/

வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம் வரும் 30ல் களக்காட்டூரில் வீதியுலா

வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம் வரும் 30ல் களக்காட்டூரில் வீதியுலா

வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம் வரும் 30ல் களக்காட்டூரில் வீதியுலா


ADDED : ஜன 16, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 16, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான வனபோஜன உற்சவம், வரும் 30ல் நடக்கிறது.

உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன்வரதராஜ பெருமாள் வரும், 30ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு, களக்காட்டூர் கிராமத்தில் மேனாபெட்டியில்எழுந்தருளி வீதியுலாவருகிறார்.

தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அங்கிருந்து புறப்பாடாகி, பாலாற்றங்கரைக்கு செல்கிறார். அங்கு,சுவாமிக்கு சிறப்புதிருமஞ்சனம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.

மாலை 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மடம், புண்ணியகோட்டீஸ்வரர் தெருவில் மண்டகப்படி நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு, சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருள்கிறார்.

இரவு 7:30 மணிக்கு அங்கிருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருள்வார்.

உற்சவத்திற்கான ஏற்பாடுகளை, வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us