sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா

/

வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா

வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா

வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா


ADDED : ஜன 28, 2025 07:42 PM

Google News

ADDED : ஜன 28, 2025 07:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடந்து வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான வனபோஜன உற்சவம் நாளை நடக்கிறது. உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள், நாளை அதிகாலை 4:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, களக்காட்டூர் கிராமத்தில் மேனாபெட்டியில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கிருந்து புறப்பாடாகி பாலாற்றங்கரைக்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது.

மாலை 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அண்ணா குடியிருப்பு, சதாவரம் மடம், புண்ணிய கோட்டீஸ்வரர் தெருவில் மண்டகப்படி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருள்கிறார்.

இரவு 7:30 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருள்வார். உற்சவத்திற்கான ஏற்பாட்டை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us