/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.32.93 லட்சம்
/
வரதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.32.93 லட்சம்
ADDED : செப் 19, 2024 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்தி கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், எண்ணப்படுகிறது.
அதன்படி கோவிலில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 32 லட்சத்து 93,980 ரூபாய் ரொக்கமும், 60 கிராம் தங்கமும், 230 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது என, கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் தெரிவித்தார்.