/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதர் கோவில் வஸ்திரம் வரும் 21, 22ல் ஏலம்
/
வரதர் கோவில் வஸ்திரம் வரும் 21, 22ல் ஏலம்
ADDED : டிச 18, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோவிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் வாயிலாக கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற வஸ்திரங்களின் ஏலம், வரும் 21, 22ம் தேதி காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும்.
விருப்பம் உள்ளவர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என, வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

