sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டாஸ்மாக் கடை மூட உத்தரவு விஷ்ணு நகர் வாசிகள் நிம்மதி

/

டாஸ்மாக் கடை மூட உத்தரவு விஷ்ணு நகர் வாசிகள் நிம்மதி

டாஸ்மாக் கடை மூட உத்தரவு விஷ்ணு நகர் வாசிகள் நிம்மதி

டாஸ்மாக் கடை மூட உத்தரவு விஷ்ணு நகர் வாசிகள் நிம்மதி


ADDED : அக் 22, 2024 07:45 PM

Google News

ADDED : அக் 22, 2024 07:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் மேட்டுத்தெரு, நெல்லுக்கார தெரு உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அப்பகுதியினருக்கு தொந்தரவாக இருந்து வந்தது.

சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் அடிக்கடி ஏற்பட்டதால், கடந்தாண்டு இந்த இரு டாஸ்மாக் கடைகளும் மூடபட்டன. இந்நிலையில், ராஜாஜி மார்க்கெட் அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடையும், அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவாக இருந்ததால், சமீபத்தில் அக்கடையை மூடி கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தேனம்பாக்கம் அருகே, விஷ்ணு நகரில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவாக இருந்தது.

இது தொடர்பாக, குடியிருப்போர் நல சங்கத்தினர், கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில், விஷ்ணு நகர் டாஸ்மாக் கடையை மூடி, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இதனால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us