ADDED : மே 23, 2025 07:57 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை தலைவர் சேகர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதியின் கீழ் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டன.
கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில், குடிநீர் மற்றும் சாலை வசதி மேம்படுத்துதல் குறித்து கவனம் செலுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில், கான்கிரீட் சாலை, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்ததுல் உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பாலாஜி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.