sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாத் பூங்கா படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்

/

வாலாஜாபாத் பூங்கா படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்

வாலாஜாபாத் பூங்கா படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்

வாலாஜாபாத் பூங்கா படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்


ADDED : ஜன 10, 2025 02:18 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத், வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 2வது வார்டு, சின்னக்கடை பகுதியில், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளி எதிரே பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.

அப்போது, பேரூராட்சி அலுவலகம் அப்பகுதியில் இயங்கியதால், அலுவலக வளாகத்தையொட்டி இத்தகைய பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

செயற்கை நீரூற்றுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்கா, ஆரம்பத்தில் செடிகள் வளர்ந்து பசுமையாகவும், குளிர்ச்சியாகவும், மக்களின் பொழுது போக்கு இடமாகவும்காட்சியளித்தது.

நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் செடிகள் காய்ந்தும், செயற்கை நீரூற்று போன்றவை பழுதடைந்து, இருக்கைகள் தவிர மற்றவை வீணாகின.இதனால், பூங்கா கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடராமகவும் இருந்து வருகிறது.

எனவே, இந்தபூங்காவை சீரமைத்து, நடைபாதை மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us