sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுவரொட்டிகளால் அலங்கோலமாக மாறும் வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகம்

/

சுவரொட்டிகளால் அலங்கோலமாக மாறும் வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகம்

சுவரொட்டிகளால் அலங்கோலமாக மாறும் வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகம்

சுவரொட்டிகளால் அலங்கோலமாக மாறும் வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகம்


ADDED : ஜன 30, 2025 08:03 PM

Google News

ADDED : ஜன 30, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலையம் எதிரே சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதே வளாகத்தின் மற்றொரு புறத்தில் பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர்களில், அரசியல் கட்சி விளம்பரம், தனியார் நிறுவனம் மற்றும் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்நதோர் பிறந்த நாள், கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட சுவரொட்டிகள் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதனால், அலுவலக சுற்றுச்சுவர் முழுதும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்த சுவரொட்டிகள் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறச் செய்வதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தோர், தினமும் சொத்து பத்திரம் பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்டவை தொடர்பாக பதிவு செய்ய வருகின்றனர்.

இவ்வாறு நல்ல நிகழ்ச்சிகள் குறித்தான தீர்வுக்கு உள்ளே செல்லும் போது, காலமானார், நினைவஞ்சலி உள்ளிட்ட சுவரொட்டிகள் பார்க்கையில் முகம்சுளிக்க வைக்கிறது. எனவே, வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவரில் அனுமதி இல்லமால் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us