/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் ரவுண்டனா சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
/
வாலாஜாபாத் ரவுண்டனா சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ரவுண்டனா சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ரவுண்டனா சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : நவ 11, 2024 02:45 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரவுண்டனா பகுதியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் பாலாற்று வழியாக கிராமங்களுக்கு செல்லும் சாலை என, 4 வழியாக சாலை பிரிகிறது. ஏராளமான பயணியர் இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
வாலாஜாபாத் ரவுண்டனா பேருந்து நிலையத்தின் காஞ்சிபுரம் - செங்கல்பட்டுக்கான சாலையில், ஒரு பகுதி பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது.
இதனால், பள்ளத்தை தவிர்த்து வாகனங்களை இயக்கும் போது, எதிரே வரும் வாகனங்களோடு விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
மழை நேரங்களில், பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறாக காட்சி அளிப்பதோடு, விபத்து அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சாலை பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.