/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு 2 நாட்களாக வீணாகும் குடிநீர்
/
பிரதான குழாயில் உடைப்பு 2 நாட்களாக வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு 2 நாட்களாக வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு 2 நாட்களாக வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 19, 2024 10:48 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியினருக்கு, வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வி.என்.பெருமாள் தெருவில், நிலத்தடியில் உள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால், திருக்காலிமேடில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
வீடுகளுக்கு செல்ல வேண்டிய குடிநீர் வீணாக சாலையில் வெளியேறுவதால், மின்மோட்டார் நீண்டநேரம் இயக்க வேண்டி உள்ளதால், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.
மின்சாரம் விரயமாவதுடன், கூடுதல் மின் கட்டணம் செலுத்துவதால் மாநகராட்சி நிதியும் விரயமாகிறது. எனவே, நிலத்தடியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

