sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தட்டு ஏந்தியபடி காஞ்சியில் நெசவாளர்கள் போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்

/

தட்டு ஏந்தியபடி காஞ்சியில் நெசவாளர்கள் போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்

தட்டு ஏந்தியபடி காஞ்சியில் நெசவாளர்கள் போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்

தட்டு ஏந்தியபடி காஞ்சியில் நெசவாளர்கள் போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்


ADDED : மார் 28, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி இதுவரையில், சங்க அலுவலகத்தில் ரொக்கமாக கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார். இந்த உத்தரவு நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நெசவு கூலியை வங்கியில் செலுத்த, நெசவாளர்களுக்கு அலைகழிப்பை ஏற்படுத்தும் என நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்துகின்றனர்.

இது சம்பந்தமாக, கம்யூனிஸ்ட், - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ரொக்கமாக கூலி வழங்குவதை உறுதி செய்ய, பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், நெசவாளர்கள் என, ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள கைத்தறி துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக, நெசவாளர்கள் நாமமிட்டு, கைகளில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி, துணை இயக்குநர் மணிமுத்துவிடம் மனு அளித்தனர். இந்த போராட்டத்தில், முத்துக்குமார், வள்ளிநாயகம், வாசு, விஸ்வநாதன், ஜீவா, மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us