sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

/

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


ADDED : ஜூலை 14, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,'தாட்கோ' வாயிலாக, 15 பயனாளிகளுக்கு, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி நேற்று வழங்கினார்.

காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், தாட்கோ மற்றும் துாய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும், 250 துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தற்காலிக பணியாளர்கள் தங்களின் பணி விபரங்களை வாரிய தலைவரிடம் எடுத்து கூறினர். சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட குறைபாடுகளை, வாரிய தலைவரிடம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், தாட்கோ திட்டத்தின் கீழ் கல்விக்கடன், திருமண உதவித்தொகை, சிறு வணிக கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், 15 பயனாளிகளுக்கு, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை, பயனாளிகளுக்கு நல வாரிய தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்வில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us