/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
ADDED : மார் 06, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக காவல் அரங்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி,மு.க., - எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார்.
கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‛மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 108 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் செலவிலான மொபைல், மூன்றுசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.