sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலாற்று நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

/

பாலாற்று நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

பாலாற்று நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

பாலாற்று நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?


ADDED : டிச 19, 2024 08:34 PM

Google News

ADDED : டிச 19, 2024 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் பாலாற்றில் இருந்து, களியப்பேட்டை மற்றும் விச்சூர் கிராம ஏரிகளுக்கு சாத்தணஞ்சேரி வழியாக நீரவரத்து கால்வாய் செல்கிறது.

இக்கால்வாயை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், பினாயூர் மற்றும் சாத்தணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் நெல், கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு பயிரிடும் விவசாயிகளில் சிலர், கடந்த ஆண்டுகளில் பாலாற்று கால்வாயை தூர்த்து, தங்கள் நிலங்களோடு சமன்செய்துள்ளனர்.

குறிப்பாக சாத்தணஞ்சேரியைச் சேர்ந்த பல விவசாயிகள், ஆங்காங்கே கால்வாயை தூர்த்து, தங்கள் நிலங்களுக்கு மாட்டு வண்டி, டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்ல ஏதுவாக பாதை வசதி ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால், மழைக்காலங்களில், பாலாற்றில் இருந்து, களியப்பேட்டை மற்றும் விச்சூர் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விச்சூர் மற்றும் களியப்பேட்டை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us