/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லாங்குழியாக மாறிய சாலை சீரமைக்கும் பணி எப்போது?
/
பல்லாங்குழியாக மாறிய சாலை சீரமைக்கும் பணி எப்போது?
பல்லாங்குழியாக மாறிய சாலை சீரமைக்கும் பணி எப்போது?
பல்லாங்குழியாக மாறிய சாலை சீரமைக்கும் பணி எப்போது?
ADDED : டிச 14, 2024 11:42 PM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 7வது வார்டுக்குட்பட்ட விக்னேஷ் நகர், சரளா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதிகளில், பாதாள சாக்கடை பணிக்கு பின் சாலைகள் சீரமைக்கப்படாததால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழை பெய்யும் போது, சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி வருகின்றன.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பலஇடங்களில் சாலைபோக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறிஉள்ளது.
எனவே, சேதமான சாலை களை சீரமைக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.