sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு சவுக்கு கட்டையால் தடுப்பு அமைப்பு

/

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு சவுக்கு கட்டையால் தடுப்பு அமைப்பு

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு சவுக்கு கட்டையால் தடுப்பு அமைப்பு

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு சவுக்கு கட்டையால் தடுப்பு அமைப்பு


ADDED : செப் 30, 2025 01:33 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்;ஏனாத்துார் அருகே, தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு, சவுக்கு கட்டையால் முட்டுக் கொடுத்து துாக்கி கட்டி உள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, மருதம் கிராமம் வழியாக, தென்னேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை, முதல்வர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில், சமீபத்தில் தார் சாலையாக செப்பணிடப்பட்டது.

இந்த கிராம சாலை வழியாக, ஒழையூர், கரூர், ராஜகுளம் கிராம மக்கள் தென்னேரி கிராமத்திற்கு செல்வதற்கு, மருதம் கிராமம் வழியாக செல்கின்றனர்.

இதில், ஏனாத்துார் காலனி சுடுகாடு அருகே, மின் ஒயர் தாழ்வாக செல்கிறது.

இதனால், ஏனாத்துார் - தென்னேரி சாலையில் இருந்து, ஸ்ரீவாரி நகரில் கட்டப்படும் அரசு குடியிருப்புகளுக்கு சிமென்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இருப்பினும், கட்டு மானப் பொருட்களை எடுத்து செல்ல, தற்காலிகமாக சவுக்கு கட்டை முட்டுக் கொடுத்து, தாழ்வாக தொங்கும் மின் ஒயரை துாக்கி நிறுத்தி உள்ளனர்.

எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயரை உயர்த்தி கட்ட வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us