sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாதில் தீயணைப்பு நிலையம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுப்பரா?

/

வாலாஜாபாதில் தீயணைப்பு நிலையம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுப்பரா?

வாலாஜாபாதில் தீயணைப்பு நிலையம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுப்பரா?

வாலாஜாபாதில் தீயணைப்பு நிலையம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுப்பரா?


ADDED : டிச 29, 2024 08:36 PM

Google News

ADDED : டிச 29, 2024 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வளர்ந்து வரும் முக்கிய நகரமாக உள்ளது. வாலாஜாபாத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. சுற்றியுள்ள பல கிராமங்களில் குடிசை வீடுகளும் உள்ளன. சங்கராபுரம், லிங்காபுரம், தென்னேரி போன்ற பகுதிகளில் தனியார் கல் குவாரிகள் அமைந்துள்ளன.

அதேபோல் ஊத்துக்காடு, கட்டவாக்கம், சிங்காடிவாக்கம், நத்தாநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் அவ்வப்போது மின் கசிவு, தீ விபத்து மற்றும் பிற அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன், நத்தாநல்லூர் கிராமத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலையிலும், அதற்கு முன் தேவரியம்பாக்கம் காஸ் சிலிண்டர் குடோனிலும் பெரிய அளவிலான தீ விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயங்களில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. ஆனால், அதிக தொலைவி இருந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ வேகமாக பரவி முழுதும் சேதமாகிறது.

கிராமப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், விவசாய கிணறுகள் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் விழுந்து விபத்தில் சிக்குகின்றன. அப்போது, தீயணைப்பு நிலையத்தின் உதவியை நாடியும் மீட்பு பணிக்கு உடனடியாக வர முடிவதில்லை.

எனவே, ஆபத்து நேரங்களில் உடனுக்குடன் மீட்பு பணி நடைபெறும் வகையில், வாலாஜாபாத் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us