sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த நெற்களம் சீரமைக்கப்படுமா?

/

சேதமடைந்த நெற்களம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த நெற்களம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த நெற்களம் சீரமைக்கப்படுமா?


ADDED : ஏப் 01, 2025 11:46 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், தளவாரம்பூண்டி ஊராட்சியில், சின்னமாகுளம், பட்டாங்குளம், வினோபா நகர், தளவாரம்பூண்டி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு, அறுவடை செய்யப்படும் நெல், வேர்க்கடலை ஆகியவற்றை உலர்த்த, சின்னமாகுளத்தில், 25 ஆண்டுக்கு முன் நெற்களம் அமைக்கப்பட்டது.

தற்போது, நெற்களம் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. நெற்களத்தின் சுற்றுப்புற சுவர்கள் இடிந்தும், நெற்கள தரை பெயர்ந்தும் உள்ளது. இதனால், நெற்களத்தில் அறுவடை செய்த நெல், வேர்க்கடலை ஆகியவற்றை உலர்த்த முடியாமல் விவசாயிகள் குவியலாக சேர்த்து வைத்துள்ளனர்.

மேலும், விளைபொருட்களை குறித்த நேரத்திற்குள் உலர்த்தி, விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த நெற்களத்தை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us