sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

/

மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?


ADDED : ஆக 22, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், மேம்பாலத்தின் மீடியனில் தெரு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு மின்விளக்கு கம்பத்தின் சிமென்ட் கலவையால் அமைக்கப்பட்ட பீடம் சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளது. மேலும், கம்பத்தில் உள்ள ஒரு மின்விளக்கு, மின் ஒயரில் ஊசலாடும் நிலையில் உள்ளது.

மின்கம்பத்தின் அடிபாகத்தில், போதுமான பிடிப்பு இல்லாததால், மின்கம்பம் பலத்த காற்றடித்தால் சாய்ந்து விழும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில், சேதமடைந்த தெரு மின்விளக்கு கம்பத்தின் பீடத்தையும், அந்தரத்தில தொங்கும் மின்விளக்கையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us