sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரி கரையின் பசுமை பரப்பு அதிகரிக்கப்படுமா?

/

ஏரி கரையின் பசுமை பரப்பு அதிகரிக்கப்படுமா?

ஏரி கரையின் பசுமை பரப்பு அதிகரிக்கப்படுமா?

ஏரி கரையின் பசுமை பரப்பு அதிகரிக்கப்படுமா?


ADDED : ஜன 26, 2024 11:46 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மேற்புற பகுதி ஸ்ரீபெரும்புதுார் அருகே காட்டரம்பாக்கம், கீவளூர், தண்டலம், மேவளூர் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

இங்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

செம்பரம்பாக்கம் ஏரிக்கு இறைதேடி ஏராளமான பறவைகள் வருகின்றன. ஏரியின் மேற்புற பகுதியில் காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியில் காப்புகாடு உள்ளது.

மேலும், காட்டரம்பாக்கம், கீவளூர் பகுதிகளில் ஏரியை ஒட்டி காலி நிலங்கள் உள்ளன.

இங்கு, அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு வன பகுதியை அதிகரிக்க வேண்டும். இதனால், பல வகையான பறவைகள் பயனடையும். சுற்றுச்சூழல் மாசும் குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us