sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் திட்ட மேலாண் அலுவலகம்

/

மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் திட்ட மேலாண் அலுவலகம்

மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் திட்ட மேலாண் அலுவலகம்

மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் திட்ட மேலாண் அலுவலகம்


ADDED : ஆக 25, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் முன் மாடுகள் கட்டுவதால், தொழுவமாக மாறி வருகிறது. இதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், சிறுங்கோழி கிராமத்தில், வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழை பெண்களை சுய உதவி குழுக்களில் சேர்த்து, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து, கடனுதவி வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். சமீப நாட்களாக, வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் முன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாடுகளை கட்டி வருகின்றனர்.

இதனால், அது மாட்டு தொழுவமாக மாறி வருகிறது. இதனால், அலுவலகத்திற்கு வருவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் முன், மாடுகள் கட்டுவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us