நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
இந்த முகாமை, வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி துவக்கி வைத்தார். இதில், 15 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 175 நபர்களில், 51 பேருக்கு தனியார் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டன.
மேலும், 24 பேருக்கு இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என, வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

