/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்
/
சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : பிப் 20, 2025 09:06 PM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில், இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குனரை சந்திக்க அனுமதிக்க கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை ‛சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தொரிவித்து, 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையின் உள்ளே, 16வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று, உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து, தொழிற்சாலைக்கு உள்ளே இருந்து வெளியேறி, வழக்கமான இடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

