sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் உலா

/

யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் உலா

யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் உலா

யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் உலா


ADDED : ஜன 18, 2025 12:51 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், மகம் நட்சத்திர உற்சவம் நடைபெறும்.

அதன்படி. நடப்பு ஆண்டுக்கான உற்சவம் நேற்று நடந்தது. இதில், நேற்று காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தார்.

மேலும், சதாவரம், கண்ணகிபுரம், அண்ணா நெசவாளர் குடியிருப்பு, சின்ன அய்யங்குளம், ஓரிக்கை வழியாக பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து, ஓரிக்கை மஹா பெரியவா மணிமண்டபம், வேளிங்கப்பட்டரை, தேசிகர் கோவில் வழியாக, மாலை 6:00 மணிக்கு கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து, திருமழிசை ஆழ்வார் சாற்றுமறை உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us