ADDED : பிப் 04, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கை மண்டபம் பகுதியில், குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக, காஞ்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ரோந்து சென்ற போலீசார், அங்கிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், அரும்பாக்கம் கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அஜீத், 27, என்பவர், குட்கா, கூல்லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து, 3 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அஜீத்தை கைது செய்தனர்.

