/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செய்யாற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு
/
செய்யாற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு
ADDED : நவ 03, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:  செய்யாற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
உத்திரமேரூர் அடுத்த இளையனார்வேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரன், 37; விவசாய கூலித்தொழிலாளி.
இவர், நேற்று காலை 10:00 மணியளவில், இளையனார்வேலுாரில் இருந்து செய்யாற்றின் வழியே, நெய்யாடுபாக்கம் சிவன் கோவிலுக்கு சென்றார்.
அப்போது, செய்யாற்றை கடக்கும்போது நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த, மாகரல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

