sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

/

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி


ADDED : செப் 22, 2025 10:51 PM

Google News

ADDED : செப் 22, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:டூ - வீலரில் சென்ற வாலிபர், நிலை தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம், ஓரிக்கை பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகன் மகன் லோகநாதன், 18.

இவர், நண்பர் பரணிகுமார், 18, என்பவருடன், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், உத்திரமேரூர் நோக்கி நேற்று சென்றுக்கொண்டிருந்தனர்.

குருவிமலை சமுதாயக்கூடம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில், வாகனத்தில் பின்புறம் அமர்ந்து பயணித்த லோகநாதன், வாகனத்தை ஓட்டிய பரணிகுமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில், லோகநாதன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை ஓட்டிய பரணிகுமார், தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us