/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
/
கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜன 31, 2025 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், 33. நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்தினார்.
பின், மது போதையில் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.