sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

முகமூடி கொள்ளையர்களால் 200 சவரன் நகை கொள்ளை

/

முகமூடி கொள்ளையர்களால் 200 சவரன் நகை கொள்ளை

முகமூடி கொள்ளையர்களால் 200 சவரன் நகை கொள்ளை

முகமூடி கொள்ளையர்களால் 200 சவரன் நகை கொள்ளை


ADDED : ஜூலை 18, 2024 10:52 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வியன்னுார் பேயோட்டுவிளையை சேர்ந்த மோகன்தாஸ், 60, பெட்ரோல் பங்க் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். உடல் நலக்குறைவால் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு மகள்கள் சென்னையில் மருத்துவம் படிக்கின்றனர். இளையமகள் அக்ஷயா, 23, கல்லுாரி விடுமுறையால் வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் இருவர், மோகன்தாசை தாக்கி, மகள் அக் ஷயாவை மிரட்டி பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.

கொள்ளையர்களிடம், 3 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கவில்லை. செல்லோடேப்பில் சுற்றி வைத்திருந்ததால் கொள்ளையர்கள் அதை கவனிக்காமல் விட்டு சென்றனர். மோகன்தாஸ் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் பெயின்டிங் வேலைக்காக ஏணி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் வழியாக கொள்ளையர்கள் ஏறி வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்தில் ஈடுபடுத்தப்பட்டது. திருவட்டார் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us