sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

702 கி.மீ. கடக்க எட்டு மணி நேரம் 24 கி.மீ. கடக்க ஒரு மணி நேரம் வந்தே பாரத் அட்டவணையில் குளறுபடி

/

702 கி.மீ. கடக்க எட்டு மணி நேரம் 24 கி.மீ. கடக்க ஒரு மணி நேரம் வந்தே பாரத் அட்டவணையில் குளறுபடி

702 கி.மீ. கடக்க எட்டு மணி நேரம் 24 கி.மீ. கடக்க ஒரு மணி நேரம் வந்தே பாரத் அட்டவணையில் குளறுபடி

702 கி.மீ. கடக்க எட்டு மணி நேரம் 24 கி.மீ. கடக்க ஒரு மணி நேரம் வந்தே பாரத் அட்டவணையில் குளறுபடி


ADDED : ஜூலை 11, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:24 கி.மீ. தூரத்தைக் கடக்க வந்தே பாரத் ரயில் ஒரு மணி நேரம் எடுப்பதால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை - நாகர்கோவில் இடையே வந்தேபாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை- நாகர்கோவில் இடையே உள்ள துாரம் 727 கி.மீ. அதிகாலை 5:00 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் சரியான நேரத்திற்கு வந்து கடந்து செல்கிறது. ஆனால் நாகர்கோவிலுக்கு வருவதற்கு அதிக நேரம் எடுக்கிறது.

நேற்று இந்த ரயில் காவல்கிணறுக்கு மதியம் 1:15க்கு வந்தது. அங்கு சிறிது நேரம் நின்ற பின் அடுத்து ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டது. ஐந்து நிமிடங்கள் நின்றபின் புறப்பட்டு ஆமை வேகத்தில் நகர்ந்து புது கிராமம் ரயில்வே கேட்டை கடந்ததும் 20 நிமிட நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

உரிய நேரத்திற்கு 20 நிமிடம் தாமதமாக 2.10 க்கு ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.

சென்னையிலிருந்து காவல்கிணறு வரை 702.5 கி.மீ., தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் ரயில் காவல் கிணறில் இருந்து நாகர்கோவில் வரையிலான 24 கி.மீ.,யை கடப்பதற்கு 55 நிமிடங்கள் எடுத்தது.

நாகர்கோவில் ரயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இங்கு மூன்று பிளாட்பாரம்கள் மட்டுமே உள்ளன. நேற்று பெங்களூரு -- கன்னியாகுமரி ரயில் 2:00 மணிக்கு வந்தது. அதை கன்னியாகுமரிக்கு அனுப்பிய பின்னரே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அனுமதிக்க முடிந்தது. நான்கு, ஐந்தாம் பிளாட்பார பணிகள் முடிந்ததும் இந்த பிரச்னை இருக்காது என்றனர்.






      Dinamalar
      Follow us