sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

வேலை வாங்கி தருவதாக மோசடி ஊட்டியில் பதுங்கிய தம்பதி கைது

/

வேலை வாங்கி தருவதாக மோசடி ஊட்டியில் பதுங்கிய தம்பதி கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி ஊட்டியில் பதுங்கிய தம்பதி கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி ஊட்டியில் பதுங்கிய தம்பதி கைது


ADDED : ஆக 09, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்து விட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பதுங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திடல்பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் 37. இவருக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதி ஷெரின் சரத்ராஜ், மஞ்சு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த தம்பதி அரசு வட்டாரத்தில் பலரை நன்றாகத் தெரியும் என்பதால் ராஜகோபாலுக்கு வேலை வாங்கி தருவதாக கூறினர்.

கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி ராஜகோபாலிடமிருந்து அந்த தம்பதி பணத்தை வாங்கினர். வேலை கிடைக்காததால் ராஜகோபால் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு போலி நியமன ஆணையை வாட்ஸ் அப்பில் தம்பதி அனுப்பினர்.

மேலும் தபாலில் ஒரிஜினல் ஆர்டர் வரும் என்றும் தெரிவித்தனர். ஆனால் தபாலிலும் எந்த ஆணையும் வரவில்லை.

இதையடுத்து ராஜகோபால் தம்பதியை தொடர்பு கொண்ட போது அலைபேசி சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தூத்துக்குடியில் அவர்கள் தந்த முகவரியிலும் இல்லை. ராஜகோபால் எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பூதப்பாண்டி போலீசார் ஊட்டியில் தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us