ADDED : மார் 06, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தடிக்காரன் கோணம் வெள்ளாம்பியை சேர்ந்தவர் குமார் 45. அரசு ரப்பர் கழக காவலாளியான இவர் நேற்று காலை காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் பணியில் இருந்தபோது கரடி இவரை தள்ளிவிட்டு காலில் கடித்துவிட்டு ஓடியது.
இதில் படுகாயம் அடைந்த குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பிப்.19-ல் பேச்சிப்பாறை அருகே கிராம்பு பறிக்கச் சென்ற தந்தை, மகனை கரடி தாக்கி தாடையை கடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.